உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்

கடலூர்:

            இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை திட்டங்கள் குறித்த செயல்முறை விளக்கம், மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.

           மத்திய அரசின் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த செயல்முறை விளக்கத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மழை வெள்ளக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,  மீட்புக் கருவிகளை சேகரித்தல், பயன்படுத்துதல், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகள குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior