உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்படுகிறது

                  தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. எந்தெந்தப் பள்ளிகள் என்பது குறித்தும், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் பற்றியும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். 

                 அதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் மட்டும், அதிகபட்சமாக 12 பள்ளிகள் நிலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.  நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  

எந்தெந்த மாவட்டங்கள்: 

                தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 

               இந்த மாவட்டத்தில் 12 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

            இதேபோன்று, காஞ்சிபுரத்தில் ஆறு பள்ளிகளும், 

             திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூரில் தலா 2 பள்ளிகளும், 

          கடலூரில் நான்கு பள்ளிகளும், வேலூரில் ஏழு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன.  

              திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரையில் தலா நான்கும், 

தருமபுரியில் ஐந்து பள்ளிகளும், 

கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல்லில் தலா மூன்று பள்ளிகளும், 

சேலத்தில் ஐந்து பள்ளிகளும், 

நாமக்கல், திருப்பூரில் தலா ஒரு பள்ளியும், 

கோவையில் ஆறு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன. 

 தேனியில் நான்கு பள்ளிகளும், 

சிவகங்கையில் இரண்டு பள்ளிகளும், 

விருதுநகர், தூத்துக்குடியில் தலா ஒரு பள்ளியும்,

திருநெல்வேலியில் மூன்று பள்ளிகளும்,  

கன்னியாகுமரியில் ஒரு பள்ளியும் மேல்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

 900 புதிய ஆசிரியர்கள் நியமனம்: 

            நிலை உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

இந்தப் பள்ளிகளில் ரூ.9,300-ரூ.34,800 மற்றும் நிலை ஊதியம் ரூ.4,800 என்ற ஊதிய விகிதத்தில் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

       அவை நிரப்பப்படும் நாளில் இருந்து ஓராண்டு காலத்துக்கு தாற்காலிகமாக அந்தப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 

 எந்தெந்தப் பாடங்களுக்கு நியமனம்: 

                 தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகள் நிலை உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதன் மூலம், புதிதாக படித்த பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நிலை உயர்த்தப்படும் பள்ளிகளில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளவை என்பதால், அங்குள்ள மாணவர்களும் பயன்பெறுவர்.  








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior