உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

              அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடந்தது. 

                    கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்த நூலை எழுதி இருக்கிறார்.  கடலூர் வாசிப்போர் இயக்கம் சார்பில் இந்த நூலின் வெளியீட்டு விழா கடலூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி வரவேற்றார்.  நூலை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் வெளியிட முதல் பிரதியை சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் பெற்றுக் கொண்டார்.  நூலைத் திறனாய்வு செய்து, ம.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் வந்தியத்தேவன், மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் பொறியாளர் ஆர்.ஸ்ரீதர், புதுவை எழுத்தாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் பேசினர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior