உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

கடலூர் மாவட்டத்தில் 65வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

கடலூர் : 

              கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

கடலூர் : 

                நகராட்சியில் சேர்மன் தங்கராசு கொடியேற்றினார். கமிஷனர் இளங்கோவன், துணைத் தலைவர் தாமரைச் செல்வன், காங்., பிரமுகர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் கந்தன், சர்தார் உட்பட பலர் பங்கேற்றனர். 

            ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சாந்தி பஞ்சமூர்த்தி தலைமையில், பி.டி.ஓ., பத்மநாபன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 

           கூத்தப்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத்தில் கவுரவ தலைவர் மாயவேல், 

           ஜெ.எஸ். ஜெ.வி., ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர் கணேசன், 

           டாக்ரோஸ் கம்பெனியில் பொதுமேலாளர் (மனித வளம்) சந்தானமணி, கொடியேற்றினார். 

               சி.கே., பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறைத் தலைவர் சசிகுமார் கொடியேற்றினார். 

            சி.கே.பள்ளியில் முதல்வர் தார்ஷியஸ், ஆலோசகர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர். 

           ஜே.எஸ்.ஜே.வி., கல்வியியல் கல்லூரியில் முதல்வர் ராஜசேகர், அரிஸ்டோ பள்ளியில் தாளாளர் சொக்கலிங்கம், 

          முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சேர்மன் சிவக்குமார் கொடியேற்றினார். 

சமபந்தி விருந்து : 

             கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் அமுதவல்லி பங்கேற்றார். 

           கடலூர் வீரஆஞ்சநேயர் கோவிலில் ஆர்.டி.ஓ., முருகேசனும், 

          திருவந்திரபுரம் தேவநாத சுவாமி கோவிலில் எஸ்.பி., பகலவன் பங்கேற்றார். 

விருத்தாசலம்
               
             நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் முருகன், அரசு கல்லூரியில் முதல்வர் செந்தமிழ்செல்வி தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 

                 எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முத்துகுமார் எம்.எல்,ஏ., பாத்திமா பள்ளியில் தொழிலதிபர் அகர்சந்த், 

              டேனிஷ் மிஷன் பள்ளியில் வழக்கறிஞர் மெய்கண்டநாதன், 

              இன்பேன்ட் பள்ளியில் தாளாளர் விஜயகுமாரி, 

             ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகேசன், 

              பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் சித்தார்தன்,

              அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தமிழரசி, 

             பூதாமூர் நகராட்சி நடுநிலை பள்ளியில் ஸ்ரீதர், 

               உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஏ.இ.ஓ., பஞ்சநாதன், 

            விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்தில் தாளாளர் சந்தரவடிவேல், 

            புதுக்கூரைப்பேட்டை விவசாய சுயஉதவி குழுக்கள் சார்பில் தலைமை ஆசிரியர் அறிவழகன், 

            விஜயமாநகரம் சரவணார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் வனஜாகுமாரி கொடியேற்றினர்.

திட்டக்குடி: 

              பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் மன்னன், 

              தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சையத்ஜாபர், 

            அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர்.பொன்னுச்சாமி, 

           பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டி.எஸ்.பி., வனிதா, 

          ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நிர்வாக இயக்குனர் சிவகிருபா தேசியக் கொடியேற்றினார். 

 பெண்ணாடம்: 

             பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அமுதலட்சுமி, 

           காங்., அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, 

           பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர். மணிமேகலை,

           ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஜெயந்தி, 

            அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மாணிக்கம்,

             இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் வலம்புரிச் செல்வன், 

             பொன்னேரி புனித தோமையர் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜோசப் ராஜ், 

            நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தாளாளர் கிருஷ்ணசாமி தேசியக் கொடியேற்றினார். 

பண்ருட்டி: 

             நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் அருணாசலம் தலைமையில் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து முன்னிலையில் சேர்மன் பச்சையப்பன் தேசிய கொடியேற்றினார். 

              அரசு அண்ணா பொறியியில் கல்லூரியில் புல முதல்வர் செந்தில்குமார், 

            போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன், 

           கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹரிமூர்த்தி, 

            நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தாளாளர் நடராஜன், 

           டேனிஷ் மிஷின் உயர்நிலைப் பள்ளியில் வெங்கடேசன், 

           மணப்பாக்கம் நேரு இளைஞர் மன்ற செயலர் சத்தியசீலன், 

             காங்., சார்பில் காந்தி சிலைக்கு சபியுல்லா மாலை அணிவித்தார். 

             பனிக்கன்குப்பம் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் புதுவை மிஷன் அச்சக மேலாளர் மரிய ஜோசப், 

              ரத்தனா மெட்ரிக் பள்ளியில் நிர்வாகி மாயகிருஷ்ணன், 

             பாலவிகார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஜெகன்நாதன், 

       அரிமா சங்கத் தலைவர் ராமதாஸ், 

               ராதிகா மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி சங்க தலைவர் மதன்சந்த் தேசிய கொடியேற்றினர்.
 


229 பேருக்கு ரூ.25 லட்சம் நலத்திட்ட உதவி


             நாட்டின் 65வது சுதந்திர தினவிழா கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. க

            லெக்டர் அமுதவல்லி தேசியக் கொடியேற்றி வைத்து 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகளை வழங்கினார். 

               விழாவையொட்டி கலெக்டர் அமுதவல்லி 9.29 மணிக்கு விழா அரங்கத்திற்கு வருகை தந்தார். டி.ஆர்.ஓ., நடராஜன் கலெக்டருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்று கொடி மேடைக்கு அழைத்துச்சென்றார். எஸ்.பி., பகலவன் முன்னிலையில் சரியாக 9.30 மணிக்கு கலெக்டர் அமுதவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

               விழாவில் பங்கேற்ற தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் நடத்திட்ட உதவிகளை வழங்கினார். 

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பேருக்கும் 

          வருவாய்த்துறை சார்பில் 8 பேருக்கு மனைப்பட்டாவும், 

            மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 3 பேருக்கும், 

             பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 11 பேருக்கும், 

              ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49 பேருக்கும், 

            வேளாண் துறை சார்பில் 5 பேருக்கும், 

            சமூக நலத்துறை சார்பில் 42 பேருக்கும், 

          சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 50 பேருக்கும், 

           தாட்கோ மூலம் 25 பேருக்கும் 

              மொத்தம் 229 பேருக்கு 24 லட்சத்து 45 ஆயிரத்து 85 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

 பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
            
           பின்னர் கடலூர், பரங்கிப்பேட்டை பள்ளிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கலெக்டர் அமுதவல்லி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

              நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ., முத்தையா, ஊர்க்காவல்படை ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior