உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

திருவள்ளுவர் பல்கலைக்கழக கோ-கோ போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடம்

கடலூர்:

               கோ-கோ விளையாட்டுப் போட்டியில் வென்று வந்த மாணவிகளுக்கு கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் பாராட்டு தெரிவித்தார். 

                திருவள்ளுவர் பல்கலைக்கழக கடலூர் மண்டல கல்லூரி மாணவிகளுக்கு இடைஹேயயான விளையாட்டுப் போட்டி, விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் விவேகானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 6,7 தேதிகளில் நடந்தது. இதில் கோகோ விளையாட்டில், கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி மாணவிகள் அணி 2-வது இடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணித் தலைவி எஸ்.கீதா உள்ளிட்ட மாணவிகளுக்கு புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் பாராட்டு தெரிவித்தார். சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை மாணவிகளிடம் அவர் வழங்கினார். 



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior