உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெல்லிக்குப்பம் :

            நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 

               நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 1980ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் 50 பேர் 31 ஆண்டுகளுக்கு பிறகு அதே பள்ளியில் சந்திப்பு விழா நடத்தினர். இதற்கான அழைப்பை தங்களுடன் படித்தவர்களுக்கும், அப்போது வகுப்பு நடத்திய ஆசிரியர்களுக்கும் அனுப்பினர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் இஸ்ரேல், டேனியல் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பரமசிவம், பூபாலன், ஜெயகாந்தன், தாமஸ், ஜான்செல்வராஜ், ஜேக்கப், ஆலிவ் பெலிஷியா அன்னம்மாள் ஆகியேர் பங்கேற்றனர். பழைய மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்களில் பலர் போலீஸ் அதிகாரிகள், டாக்டர், ஆசிரியர் பணியில் உள்ளனர். பள்ளிப்பருவத்தை நினைவு கூர்ந்து படித்த வகுப்பறைகளில் உட்கார்ந்து மகிழ்ந்தனர். மேலும், தங்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். சந்திப்பை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நட்டனர். 






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior