உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

"ஓய்வூதியர் களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

               "ஓய்வூதியர் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவும், நூலாசிரியருக்குப் பாராட்டு விழாவும், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்கம் சார்பில், கடலூரில் சனிக்கிழமை நடந்தது.

                நிகழ்ச்சிக்கு, மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்க கடலூர் வட்டத் தலைவர் வை.இராசவேலு தலைமை வகித்தார். வட்டச் செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொறியாளர் சா.வேல்முருகன் எழுதிய, ஓய்வூதியர் களஞ்சியம் நூலை சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.வானசுந்தரம் வெளியிட, முதல் பிரதியை சக்தி ஐ.டி.ஐ. தாளாளர் ஆர்.சந்திரசேகர் பெற்றுக் கொண்டார். நூலைத் திறனாய்வு செய்து மாநிலப் பொதுச் செயலர் பெ.கருப்பையா பேசினார். பொறியாளர் வேல்முருகன் ஏற்புரை நிகழ்த்தினார்.

                பொறியாளர் செந்தமிழ்சேய் எழுதிய, தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற செம்பியன் தமிழவேள் வரலாற்று காவியத்தைத் திறனாய்வு செய்தும், நூலாசிரியரைப் பாராட்டியும் சங்கத்தின் உயர்நிலைக் குழுத் தலைவர் கோவிந்தசாமி பேசினார். நூலாசிரியர் பொறியாளர் சி.செந்தமிழ்சேய் ஏற்புரை நிகழ்த்தினார். வட்டப் பொருளர் சு.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior