உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மற்றும் ஜனனம் தொண்டு மையம் சார்பில், 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில், தொண்டு மைய நிறுவனர் அன்சாரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் த.செந்தமிழ்ச்செல்வி தலைமை ஏற்றார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில அமைப்புச் செயலர் ரங்கப்பிள்ளை, எழுத்தாளர் சி.சுந்தரபாண்டியன், வர்த்தக அணிச் செயலர் கார்த்திக், தொண்டு மைய துணைத் தலைவர் சீனிவாசன், பேராசிரியர்கள் சிவகுமார், பாலசங்கு, சாலமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior