உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

தில்லி செல்​லும் கட​லூர் விவ​சா​யி​கள்

கட ​லூர்,​ நவ.30: 

      நவீன வேளாண் கரு​வி​க​ளைக் காண்​ப​தற்​கும் விவ​சா​யத்​தில் புதிய தொழில்​நுட்​பங்​க​ளைத் தெரிந்து கொள்​ள​வும் கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் 37 பேர்,​ தில்​லிக்கு திங்​கள்​கி​ழமை அழைத்​துச் செல்​லப்​பட்​ட​னர். ​

மத்​திய அர​சின் வேளாண் தொழில்​நுட்ப நிர்​வாக முகமை ​(ஆத்மா)​ சார்​பில் அனைத்து மாநி​லங்​க​ளில் இருந்​தும் விவ​சா​யி​கள் தில்​லிக்கு அழைத்​துச் செல்​லப்​ப​டு​கி​றார்​கள்.    அகில இந்​திய விவ​சா​யி​கள் சங்க கூட்​ட​மைப்​பின் சார்​பில் தில்​லி​யில் டிசம்​பர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தேசிய விவ​சா​யி​கள் மாநாடு,​ வேளாண் கருத்​த​ரங்​கம் மற்​றும் வேளாண் கரு​வி​கள் கண்​காட்​சி​யும் தில்​லி​யில் நடை​பெ​று​கி​றது. ​


இந்​தக் கருத்​த​ரங்​கில் கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் கலந்து கொண்டு நவீன வேளாண் தொழில்​நுட்​பங்​க​ளைத் தெரிந்து கொள்ள இருக்​கி​றார்​கள்.    வேளாண் கரு​வி​கள் கண்​காட்​சி​யைப் பார்​வை​யிட்டு அவற்​றைப் பயன்​ப​டுத்​தும் முறை​க​ளை​யும் நமது விவ​சா​யி​கள் தெரிந்து கொள்​வர்.

சேத் ​தி​யாத்​தோப்பு அணைக்​கட்டு விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் கோ.விஜ​ய​கு​மார்,​ வெங்​க​டாம்​பேட்டை உழ​வர் மன்​றத் தலை​வர் ஆறு​மு​கம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பேரூ​ராட்​சித் தலை​வர் கணே​ச​மூர்த்தி,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தி.மு.க. ஒன்​றி​யச் செய​லா​ளர் முத்​து​சாமி,​ புவ​ன​கிரி ஒன்​றி​யச் செய​லா​ளர் வி.என்.ஜெய​ரா​மன் உள்​ளிட்ட விவ​சா​யச் சங்​கங்​க​ளின் பிர​தி​நி​தி​கள்,​ உழ​வர் மன்​றங்​க​ளின் பிர​தி​நி​தி​கள் தில்லி சென்​றுள்ள குழு​வில் இடம்​பெற்று உள்​ள​னர். ​

வி​வ​சா​யி​க​ளுக்கு உத​வி​யாக வேளாண் அலு​வ​லர்​க​ளும் சென்​றுள்​ள​னர்.    இவர்​கள் 5-ம் தேதி தில்​லி​யில் இருந்து கட​லூர் திரும்​பு​வர்.        தில்லி செல்​லும் குழுவை கட​லூ​ரில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் கொடி அசைத்து வழி​ய​னுப்பி வைத்​தார்.

மா ​வட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ வேளாண் இணை இயக்​கு​நர் க.பாபு,​ ஆட்​சி​ய​ரின் நேர்​முக உத​வி​யா​ளர் ​(விவ​சா​யம்)​ த.மணி,​ வேளாண் அலு​வ​லர் எஸ்.பூவ​ரா​கன் ஆகி​யோர் உடன் இருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior