உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் கோரிக்கை நியா​ய​மா​னது முன்​னாள் வனத்​துறை அமைச்​சர்

சிதம் ​ப​ரம்,​ நவ.30: 
 
            வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் குறை மிக​வும் நியா​ய​மா​னது. டிஎன்​பி​எஸ்​சி​யின் விதி​மு​றை​கள் திருóத்​தப்​பட வேண்​டும் என எம்​ஜி​ஆர் அமைச்​ச​ர​வை​யில் இருந்த முன்​னாள் வனத்​துறை அமைச்​சர் வி.வி.சுவா​மி​நா​தன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.இது குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ நான் வனத்​துறை அமைச்​ச​ரா​க​வும்,​ இந்து அற​நி​லை​யத்​துறை அமைச்​ச​ராக இருந்​த​போது பெரு​மாள் கோயில்​க​ளில் அபி​ஷே​கத்​திற்கு போதிய அகில் ​(சாம்​பி​ராணி)​ கிடைக்​க​வில்லை.÷நான் வனத்​துறை அதி​கா​ரி​களை கூப்​பிட்டு அகில் மரம் அதி​கம் வளர்க்க நாம் ஏன் முயற்​சிக்​கக் கூடாது என கேட்ட போது,​ "அது​போன்ற ஒரு​ம​ரமே இல்லை' என அந்த அதி​காரி கூறி​விட்​டார்.÷சங்க காலத்​தில் மாத்​தி​ர​மல்​லா​மல் பாவேந்​தர் பார​தி​தா​சன் கூட அகி​லும் தேக்​கும் அழியா குன்​றும் என பாடி​யி​ருக்​கி​றார் என்று நான் கேட்​ட​தற்கு அதி​கா​ரி​கள் கவி​க​ளின் கற்​பனை என சொன்​னார்​கள். சாம்​பி​ராணி மரம் என்று ஒன்​றும் கிடை​யாது. அது வெளி​நாட்​டில்​தான் வள​ரும் என பதில் அளித்​தார்​கள்.÷நான் மேல்​ம​ரு​வத்​தூர் ஆதி​ப​ரா​சக்தி சுவா​மி​யு​டன் சேலம் சென்​ற​போது அந்​ந​க​ரில் ஒரு​வர் வீட்டு முன்பு சாம்​பி​ராணி மரம் இருப்​பதை கண்​டேன். வனத்​துறை அதி​கா​ரி​க​ளுக்கு முக்​கி​ய​மாக உப​யோ​கப்​ப​டுத்​தப்​ப​டும் மரங்​கள் பற்றி தெரி​ய​வில்லை.÷ஏ​னென்​றால் அவர்​கள் தாவ​ர​வி​யல் படிக்​க​வில்லை. அன்​று​மு​தல் நான் யூனி​யன் பப்​ளிக் சர்​வீஸ் கமி​ஷன் தேர்​வில் வன இலாகா அதி​கா​ரி​கள் பதவி தேர்​வுக்கு தாவ​ர​வி​யல் பட்​டம் கட்​டா​ய​மாக்​கப்​பட வேண்​டும் என வலி​யு​றுத்தி வந்​தேன். தா​வ​ர​யி​யல் படிக்​கும் வனத்​துறை கல்​லூரி மாண​வர்​களை வனத்​துறை அதி​கா​ரி​கள் பத​விக்கு தகுதி பெற்​ற​வர்​க​ளா​கி​றார்​கள். ​ எனவே வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் கோரிக்கை நியா​ய​மா​னது என அதி​கா​ரி​யும் அம் மாண​வர்​க​ளுக்கு நியா​யம் வழங்க வேண்​டும் என வி.வி.சுவா​மி​நா​தன் தெரி​வித்​துள்​ளார்.பண்​ருட்டி நக​ராட்சி நிர்​வா​கத்​தின் மீது கவுன்​சி​லர்​கள் புகார்​​ பண்​ருட்டி,​நவ.30: பண்​ருட்டி நக​ராட்சி நிர்​வா​கம் மற்​றும் ஊழி​யர்​க​ளின் செயல்​பா​டு​கள் குறித்து கவுன்​சி​லர்​கள் நகர மன்​றக் கூட்​டத்​தில் புகார் தெரி​வித்​த​னர்.÷பண்​ருட்டி நக​ராட்​சி​யின் சாதா​ர​ணக் கூட்​டம் நக​ராட்சி வளா​கத்​தில் அதன் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன் தலை​மை​யில்,​ துணைத் தலை​வர் கே.கோதண்​ட​பாணி முன்​னி​லை​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.
கூட்​டத்​தில் நடை​பெற்ற விவா​தம்:​​கிருஷ்​ண​மூர்த்தி​(திமுக)​:​​ நக​ராட்​சி​யின் முக்​கிய ஆவ​ணங்​கள் தனி நபர்​கள் வசத்​தில் உள்​ளன. ஊழி​யர்​கள் ஆவ​ணங்​களை வீட்​டிற்கு கொண்டு செல்​வதை தடை செய்ய வேண்​டும். சில கால​மாக நிர்​வா​கத்​தில் இடைத் தர​கர்​கள் ஆதிக்​கம் அதி​க​ரித்​துள்​ளது. ​ ஆளும் கட்​சி​யில் உள்​ள​தால் அதி​கம் பேச முடி​ய​வில்லை. இதற்கு ஆணை​யர் உரிய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்​பழனி​(திமுக)​:​​ நக​ரப் பகு​தி​யில் சாலை​கள் மிக மோச​மாக உள்​ளன. அதி​கா​ரி​கள் நக​ரப் பகு​தியை சுற்றி பார்த்து நட​வ​டிக்கை எடுப்​பது கிடை​யாது. குப்​பை​களை அப்​பு​றப்​ப​டுத்​து​வது கிடை​யாது,​ புதிய ஆணை​யர்,​ பைபாஸ் சாலை கொண்டு வர ஏற்​பாடு செய்ய வேண்​டும்.​சரஸ்​வதி​(அதி​முக)​:​​ பல​முறை கோரிக்கை வைத்​தும் 33-வது வார்​டுக்கு எது​வும் செய்​ய​வில்லை,​ கேட்​டால் பணம் இல்லை என கூறு​கி​றீர்​கள். எனது பகு​திக்கு சாலை,​ தண்​ணீர் வசதி செய்து கொடுக்க வேண்​டும்.​எம்.பச்​சை​யப்​பன்​(தலை​வர்)​:​​ தங்​கள் பகு​திக்கு செய்த பணி​கள் குறித்த பட்​டி​யலை தரு​கி​றேன் பாருங்​கள்.​துரை ​ராமு​(திமுக)​:​​ சோமேஸ்​வ​ரர் கோயில் தெரு​வில் சாலை போட தீர்​மா​னம் நிறை​வேற்றி ஒரு ஆண்டு ஆகி​யும் சாலை போட​வில்லை,​ பிறப்பு,​ இறப்பு சான்​றுக்கு 4,5 நாள்​கள் இழுத்​த​டிக்​கின்​ற​னர். ஒரு நாளில் கொடுக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்,​ புகார் பெட்​டி​யில் போடும் மனுக்​கள் தொலைந்து விட்​ட​தாக ஊழி​யர்​கள் கூறு​கின்​ற​னர். ÷பொது நிதி​யில் சிமென்ட் சாலை போடக் கூடாது என இதற்கு முன் இருந்த அதி​கா​ரி​கள் கூறி வந்​த​னர். போட​லாமா,​ கூடாதா என கூற வேண்​டும்.​சக்​தி​வேல் ​(பொறி​யா​ளர்)​:​​ போட​லாம்.​பர ​ம​சி​வம்​(திமுக)​:​​ சுடு​காடு சிமென்ட் சாலை போட்​ட​தில் ஊழல் நடக்​கி​றது. மண் புழு உரக் குடோ​னால் துர்​நாற்​றம் வீசு​வ​து​டன்,​ நிலத்​தடி நீர் மாச​டைந்து சுகா​தார சீர்​கேடு ஏற்​பட்​டுள்​ளது.​சக் ​தி​வேல்​(பொறி​யா​ளர்)​:​​ இடத்தை பார்​வை​யிட்டு ஆவன செய்​கி​றேன்.​தட்​சி​ணா​மூர்த்தி​(திமுக)​:​​ ஒருங்​கி​ணைந்த குடி​யி​ருப்பு மற்​றும் குடி​சைப் பகுதி மேம்​பாட்டு திட்​டத்​தில் விண்​ணப்​பத்​து​டன் பணம் வசூ​லிக்​கப்​பட்​டும் இது வரை எந்த நட​வ​டிக்​கை​யும் இல்லை.
 
 
இ​தற்கு பின்​னால் செயல்​ப​டுத்​திய நெல்​லிக்​குப்​பம் நக​ராட்சி செயல்​ப​டுத்​தி​யுள்​ளது. கட​லூ​ரில் பிறப்பு,​ இறப்பு சான்​றுக்கு ரூ.2 வசூல் செய்​கி​றது. பண்​ருட்​டி​யில் ரூ.55 வசூல் செய்​யப்​ப​டு​கி​றது ஏன் இந்த வேறு​பா​டு​கள்?​​ சண்​ மு​கம்​(அதி​முக)​:​​ நான்கு முனை சந்​திப்​பில் உள்ள சிக்ன​லில் தனி​யார் விளம்​ப​ரப் பல​கை​யில் 30 லைட்​டு​கள் எரி​கி​றது. இதற்கு  யார் அனு​மதி அளித்​தது. தனிப்​பட்ட நபர் விளம்​ப​ரத்​துக்​காக நக​ராட்சி வரிப்​ப​ணம் வீண​டிக்​கப்​ப​டு​கி​றது. இதற்கு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior