உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

இடைத்​தேர்த​லில் திமு​க​வுக்கு பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை ஆத​ரவு

சிதம்​ப​ரம், நவ. 30:​ 


     நடை​பெற உள்ள திருச்​செந்​தூர்,​ வந்​த​வாசி இடைத்​தேர்த​லில் திமு​க​வுக்கு நிபந்​த​னை​யற்ற ஆத​ரவு அளிப்​பது என அகில இந்​திய பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யுள்​ளது.

   அ​கில இந்​திய பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை மாநி​லப் பொதுக்​கு​ழுக் கூட்​டம் சிதம்​ப​ரத்​தில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது. அதில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​      

மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள மீன​வர்​க​ளுக்​கான கருப்பு தடை சட்​ட​மான கட​லோர மேலாண்மை சட்​டத்தை வாபஸ் பெற வேண்​டும்.        என்​எல்சி நிறு​வ​னம் வட மாநி​லத்​த​வர்​க​ளுக்கு வேலை வழங்​கு​வதை தவிர்த்து கட​லூர் மாவட்ட படித்த இளை​ஞர்​க​ளுக்கு வேலை வழங்க வேண்​டும் ​ எதிர்​வ​ரும் காலங்​க​ளில் கட​லூர் மாவட்​டத்​தில் வெள்ள அபா​யத்தை தவிக்க அரசு நிரந்​திர தடுப்பு நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும்.

    கூட்​டத்​துக்கு மாநி​லத் தலை​வர் லட்​சு​மி​காந்​தன்​பிள்ளை தலைமை வகித்​தார்.   செய​லா​ளர் நன்​னி​லம் அழ​கு​நம்பி வர​வேற்​றார். அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் வீர​வன்​னி​ய​ராஜா பங்​கேற்று சிறப்​பு​ரை​யாற்​றி​னார். கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் வீர​வன்​னி​ய​வேங்​கன்,​ நிர்​வா​கக் குழு உறுப்​பி​னர் அப்​துல் லத்​தீப்,​ மாவட்​டத் தலை​வர் தியா​க​வல்லி தன​சே​க​ரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பேசி​னர். பொரு​ளா​ளர் முக​ம​து​அ​னீபா நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior