உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

ரயில்வே சுவர் வைக்க எதிர்ப்பு

கட ​லூர்,​ நவ.30: 


      மக்​கள் செல்ல பாதை இல்​லா​மல் ரயில் பாதை​யோ​ரம் மதில் சுவர் வைப்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து,​ நெல்​லிக்​குப்​பம் பொது​மக்​கள் திங்​கள்​கி​ழமை கட​லூர் மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு அளித்​த​னர். ​

நெல்​லிக்​குப்​பம் பீட்​டர் தெரு பகு​தி​யில் சுமார் 150 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன.     இப் பகு​தி​யை​யொட்டி ரயில்​பாதை ஓர​மாக மதில்​சு​வர் வைக்க ரயில்வே இலாகா முடிவு செய்து இருக்​கி​றது. 

       இப்​ப​குதி மக்​கள் சென்று வர நடை​பாதை அள​வுக்கு இடம் விட்டு மதில் சுவர் அமைக்​கு​மாறு அப்​ப​குதி மக்​கள் கோரி வரு​கி​றார்​கள். 

    பா​தை​யின்றி ரயில்வே துறை மதில் சுவர் கட்​டு​வ​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து அப்​ப​குதி மக்​கள்,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​ன​ரு​டன் இணைந்து திங்​கள்​கி​ழமை கட​லூ​ரில் மாவட்ட ஆட்​சி​யரை சந்​தித்து மனு அளித்​த​னர்.

வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன்,​ தமிழ் தேசிய கட்சி மாநில துணைச் செய​லா​ளர் திரு​மார்​பன்,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் வழக்​க​றி​ஞ​ரணி மாவட்​டச் செய​லா​ளர் காத்​த​வ​ரா​யன்,​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் அறி​வுக்​க​ரசு,​ தொண்​ட​ர​ணிச் செய​லா​ளர் ஸ்ரீதர்,​ ஓவி​யர் அணி துணைச் செய​லா​ளர் ஜெய​ரா​மன் உள்​ளிட்​டோர் சென்று இருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior