உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

ஆட்டோ மரத்தில் மோதியதில் 11 மாத கைக்குழந்தை பலி

கடலூர் :

                   கடலூர் அருகே ஆட்டோ மரத்தின் மீது மோதியதில் 11 மாத கைக்குழந்தை இறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பழனிவேல் (25). இவர் நேற்று மாலை தனது மனைவி கவிதா (22), 11 மாத கைக்குழந்தை கிருபா மற்றும் தனது மைத்துனர் சக்திவேல் மகன் நவீன் (8), மகள் திருத்திஷா (5) ஆகியோருடன் காணும் பொங் கலையொட்டி சில்வர் பீச்சுக்கு செல்வதற்காக தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.

                   கோண்டூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 11 மாத ஆண் குழுந்தை கிருபா சம்பவ இடத்திலேயே இறந்தது. கவிதா, நவீன், திருத்திஷா மற்றும் பழனிவேல் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் நவீன், திருத் திஷா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து நெல்லிக் குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior