உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

கடலூர் :

                       பைக்கில் வேகமாக சென்றவரை தட்டிகேட்டதால் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் காயமடைந்தனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் புதுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சத்யா(23). இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் பைக்கில் வேகமாக வந்த காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த பிரபாகரனை சத்யா "ஏன் வேகமாக செல்கிறாய்' என கேட்டதால் தகராறு ஏற்பட்டது. பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சத்யா தரப்பினரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரன்,  கோபால், புஷ்பராஜ், சோமு, வேலுவை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior