உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

கணவரை காணவில்லை 4 ஆண்டிற்கு பின் மனைவி புகார்

கடலூர் :

                  கடலூரில் காணாமல் போன நகராட்சி துப்புரவு ஊழியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் குயவர் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் (48).  கடலூர் நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

                 கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கடலூர் முதுநகர் 9வது வார்டில் துபபுரவு பணிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர் நான்கே முக்கால் அடி உயரமும், இடது கையில் நாகம்மாள் என பச்சை குத்தியிருப்பார். மேல் உதட்டில் காய வடு ஒன்றும் இருக்கும். இதுகுறித்து அவரது மனைவி நாகம் மாள் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior