உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

மதுபாட்டில் விற்பனை: 3 பேர் கைது

புவனகிரி :

                  புவனகிரி அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி பகுதியில் நேற்று முன்தினம் டாஸ் மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மது பாட் டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

                 அப்போது புவனகிரி ராமலிங்கசாமி கோயில் சந்து அருகே கள்ளிக்காட்டு காலனியை சேர்ந்த பிரசாத்(30) என்பவர் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடமிருந்து 22 குவாட்டர் பிராந்தி பாட்டில்களும்,ரொக்கம் 270ம் கைப்பற்றப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில்  கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமது ராஜா(45) என்பவர் கீரப்பாளையம் காந்தி நகரில் அவரது  உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 265 மது பாட்டில்கள், ஆதிவராகநத்தம் அன்னை தெரசா நகரில் வசிக்கும் செல்வம் (45) என்பவர் வீட்டிலிருந்து 32 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து  மூன்று பேர�யும் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior