உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் 25ம் தேதி சாலை மறியல் செய்ய முடிவு

சேத்தியாத்தோப்பு :

                            தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக செயல்படும் அரியலூர் மாவட்ட அதிகாரிகளை கண்டித்து ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில்  25ம் தேதி சாலை மறியல் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின்  அனைத்து கரும்பு விவசாயிகள் சங் கங்களின் கூட்டமைப்பு கூட்டம்  நடந்தது.

                  பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க செயலர் சிட்டிபாபு தலைமை தாங்கினார்.  விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அப்பாதுரை, டாக்டர் பன்னீர் செல்வம், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். வீரசோழன் வரவேற்றார். பாபு, தேவதாஸ் படையாண்டவர், குஞ்சிதபாதம், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க மகாராஜன், ஓட்டுனர்கள் சங்க வேல்முருகன் உள்ளிட் டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு பயிருக்கான விவகார எல்லையான ஆண்டிமடம் பிர்கா பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டி செல் வதை உடனே நிறுத்த வேண்டும்.


                           கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமலும், விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்படும் அரியலூர் மாவட்ட அரசு அதிகாரிகளின் போக்கை கண்டிக்கிறோம். தங்களின் விருப்பத் திற்கு ஏற்பவே ஆண்டிமடம் பிர்கா கரும்பு விவசாய எல்லை எம்.ஆர்.கே., ஆலைக்கு விஸ்தரிக்கப் பட்டது என்பதை புரிந்து அப்பகுதி விவசாயிகள் எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்ப கேட்டுக்கொள்வது.

            சேத்தியாத்தோப்பில் கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நடந்த பேச்சுவார்த் தையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத அதிகாரிகளின் மெத் தன போக்கை  கண்டிப்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ரோட்டில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior