உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

ராஜகோபாலசுவாமி கோவிலில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

கடலூர் :

             கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பாவை விழா மற்றும் திருக்குறள்  ஒப்புவித் தல் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு  இந்து சமய அறநிலையத் துறை  உதவி ஆணையர்  ஜெகநாதன் தலைமை தாங்கினார். திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில்  செயல் அலுவலர் கிருஷ் ணகுமார் முன்னிலை வகித்தார்.  ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார். திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு  வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார். கவிஞர் சிங்காரம், கவிஞர் சம்பத்,ஜெயராமன், கணபதி மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பலர் பங்கேற்றனர். செயல்  அலுவலர்  நாகராஜன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior