உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

சிதம்பரத்தில் மூன்று பேர் கண்கள் தானம்

சிதம்பரம் :

             சிதம்பரம் காஸ்மோபாலிடன் அரிமா சங்கம் சார்பில் மூன்று பேரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் கமலீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகா (60), அகரநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் (45), உசுப்பூரை சேர்ந்த அருணகிரி (42). இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் இறந்தனர். தகவலறிந்த சிதம்பரம் காஸ்மோ பாலிடன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் வியஜகுமார், மனோகரன் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் பேசி டாக்டர் அனுஷ் அகர்வால் உதவியுடன் மூன்று பேரின் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior