உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

நரியன் ஓடையில் உயர்மட்ட பாலம் தற்காலிகமாக திறப்பு

நடுவீரப்பட்டு :

              நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடை உயர்மட்ட பாலம் தற்காலிகமாக திறக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் ஒரு கோடியே 12 லட்சம் மதிப் பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.

              சி.என்.பாளையம் கிராமத்தில் உள்ள புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழாவின் போது  வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் சுவாமியை வழிபட கோவிலுக்கு வருவார்கள்.அவர்கள் கோவிலுக்கு  சென்று வர போதிய வழி இல்லாததால் உயர் மட்ட பாலத்தை தற்காலிகமாகவோ அல்லது திருவிழாவிற்குள்ளோ திறப்பு விழா நடத்த வேண்டும் என தினமலரில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் பாலம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தற்காலிகமாக   திறக்கப்பட்டது. இதனால் வெளியூர் பக்தர் கள் சிரமமின்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior