உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

தூக்கில் வாலிபர் பிணம்: போலீஸ் விசாரணை

கடலூர் :

                  கடலூர் முதுநகர் அருகே வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த சின்னகாட்டு சாகையைச் சேர்ந்தவர் சிவசங்கர் (29). இவர் அதே பகுதியில் நேற்று மாலை நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். போட்டிகள் முடிந்ததும் கூல் டிரிங்ஸ் பாட்டிலை வைத்து  வாயால் திறந்து  அப்படியே குடிக்கும் போட்டியை நடத்த வேண்டும் என கேட் டுள்ளார்.

           போட்டி கள் முடிந்து விட்டது இனி நடத்த முடியாது என போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியுள் ளார். சிவசங்கரை எதிர்  தரப்பினர் கொலை செய்து விட்டதாக  கூறியதால் பதட்டம் ஏற் பட்டது. உடன் இன்ஸ்பெக்டர் தம்புசாமி, சப் இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் சம் பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior