உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

கூரை வீடு எரிந்ததில் ரூ.1.5 லட்சம் சேதம்

புவனகிரி :

                         கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.புவனகிரி அடுத்த பெருமாத்தூர் புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (34). வீட்டிலேயே கவரிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சிமினி விளக்கு தீப்பிடித்தது அருகிலிருந்த ஸ்கிரீனில் பட்டு கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. அதில் வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் மற்றும் கவரிங் செயின்கள் எரிந்து சேதமடைந்தன. சிதம்பரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சாதிக் அலி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior