உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

கிராம மக்கள் முதல்வருக்கு மனு

சேத்தியாத்தோப்பு :

           ஓடாக்கநல்லூரில் குடிநீர் வசதி கோரி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

                  கீரப்பாளையம் ஒன்றியம் ஓடாக்கநல்லூர் ஊராட்சியில் ஓராண்டாக குடிநீர் குழாய்கள் பராமரிக்காததால் பல இடங்களில் இயங்கவில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் அலைய வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய, மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும்  நடவடிக்கை இல்லை. தெரு விளக்குகளும் எரியாமல் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. ஓடாக்கநல்லூரில் ஊராட்சி அமைப்பு முடக்கி வைத்திருப்பதாக கூறி எந்த திட்டத்தையும் செயல்படுத்த ஒன்றிய, மாவட்ட நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. எனவே மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் தெருவிளக்கு பிரச்னையினை மாநில அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior