உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

பண்ருட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

பண்ருட்டி :

                  பண்ருட்டியில் ம.தி. மு.க., சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ம.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத் திற்கு நகர செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந் தில்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் பெருமாள், பொருளாளர் வேலு, ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, காஞ்சி பாஸ்கர், வக்கீல் பாஸ்கரய்யா, மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம், மாநில கலைத்துறை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பழனி, நகர தலைவர் அண்ணாதுரை, துணை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் பேசினர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

               விருத்தாசலம்: தி.மு.க., சார்பில் மொழிப் போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுகூட்டம் நடந்தது.தலைமை பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அவை தலைவர் அபுபக்கர், நகர மன்ற துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, திராவிடசெல்வி, கவுன்சிலர் சுந்தரேசன், சந்தானலட்சுமி முன்னிலை வகித் தனர். மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன் வரவேற்றார். பேச்சாளர் சுந்தரேசன், விஜயகுமாரி மொழிப் போர் தியாகிகள் குடும்பத் திற்கு நினைவு பரிசுகள் வழங்கி பேசினர். நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் ராமு, ஞானமுத்து, பாவாடை கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior