உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

கடலூர் அருகே பஸ் சிறைபிடிப்பு

கடலூர் :

           கடலூர் அருகே அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அடுத்த தம்மனாம்பேட்டை கிராமத் திற்கு கடலூரில் இருந்து அரசு டவுன் பஸ் (தடம் எண்.26) தினமும் காலை 5.30, மாலை 3.30, இரவு 10.30 மணிக்கு இயக்கப்படுகிறது.

                           நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு கடலூர் பஸ் நிலையத்தில் பஸ் புறப்பட தயாராக இருந்த நிலையில் அதிகளவில் பயணிகள் இல்லாததை காரணம் காட்டி பஸ்சில் இருந் தவர்கள் இறக்கி விடப்பட்டனர். பின் அந்த பஸ் வேறு பகுதிக்கு மாற்றி விடப்பட்டது. ஆத்திரமடைந்த தம்மனாம்பேட்டை கிராம மக்கள் நேற்று காலை 5.30 மணிக்கு கிராமத்திலிருந்து கடலூருக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். கடலூர் அரசு போக் குவரத்து பணிமனை கிளை மேலாளர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். முறையாக பஸ் இயக்கப்படும். பஸ் "ட்ரிப்பை' நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று காலை 10 மணிக்கு பஸ் விடுவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior