உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

மினிலாரி கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

கடலூர் :

                                    மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் இறந்தார். காட்டுமன்னார்கோவில் தாலுகா பாளையங்கோட்டை வடக்குபாளையம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 60 பேர் நேற்று முன்தினம் கடலூரில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் மினி லாரியில் திரும்பியபோது குறிஞ்சிப் பாடி அருகே லாரி கவிழ்ந் தது. காயமடைந்த 50 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வடக்குப் பாளையம் அற்புதமேரி, இருதயமேரி(49) இறந்தனர். சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் மனைவி சகாயசெல்வி(30) நேற்று இறந்தார்.  சிகிச்சை பெற்று வருப வர்களை அமைச்சர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூ., நல்லக்கண்ணு, எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior