உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

மருத்துவ காப்பீட்டு திட்டம் புகைப்படம் எடுக்கும் பணி

விருத்தாசலம் :

                    விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக் கும் பணி இரு கட்டமாக கிராமங்களில் நடந்தது.

                இதில் புகைப்படம் எடுக்க தவறியவர்களுக்கு ஜனவரி 20 ம் தேதி முதல் மூன்று மாதங்கள் வரை விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்க தவறியவர்கள் புகைப்படம் எடுக்க வரும் போது ரேஷன் கார்டு, விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., விடம் இருந்து ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத் திற்கு குறைவானவர்கள் என்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior