உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

மகன் மீது பொய் வழக்கு: தாய் எஸ்.பி.,யிடம் புகார்

கடலூர் :

                    மகன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக தாய் எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் பெரியசாமி மனைவி கோவிந்தம்மாள் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் கொடுத்துள்ள மனு:எனது மகன் சிவா சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இதுவரை அவர் மீது போலீசில் எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் 20ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு கடலூர் புதுநகர் இன்ஸ் பெக் டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வீட்டிற்கு வந்து சிவாவை அடித்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். அதனை தடுத்த என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கீழே தள் ளினர். காமராஜ் நகர் குணா-சீத்தா தம்பதியரின் மகள் பிரியாவும், சிவாவும் காதலித்து வந்தனர். இது பிடிக்காத பிரியாவின் தந்தை போலீசாரை ஏவிவிட்டு சிவா மீது வழிப்பறி செய்ய முயன்றார் என பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவாவை வழக்கிலிருந்து விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior