உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

நெல்லிக்குப்பத்தில் சமுதாயக்கூடம் பயன்பாடின்றி வீணாகிறது

நெல்லிக்குப்பம் :

              நெல்லிக்குப்பம் நகராட்சியில் எம்.எல்.ஏ., வால் திறந்து வைக்கப் பட்ட சமுதாய கூடங்கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.

               நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் ஆலை ரோட்டில் 10 லட்சம் ரூபாய் செலவிலும், வான் பாக்கத்தில் எட்டு லட்சம் மதிப்பிலும் சமுதாய கூடங்கள் கட்டப் பட்டன. பணிகள் முடிந்து ஓராண் டாகியும் திறக்கப்படாமல் இருந்தது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் சேர்மன் கெய்க்வாட்பாபு முன்னிலையில் எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் திறந்து வைத்தார். ஆனால் நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இல்லாததால் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது. நகராட்சி சார்பில் தேவையான பொருட்களை வாங்கி வைத்து மக்கள் பயன்படுத்தும்படி செய்ய வேண்டும். நகராட்சி சார்பில்  நிர்வகிக்க முடியாவிட் டால் தனியாரிடம் குத்தகைக்கு விடலாம். சைக்கிள் ஸ்டேண்ட், சந்தை வசூல், பஸ்நிலையத்தில் பஸ்கள் வசூல் தனியாரிடம் உள்ளது. அதே போல் சமுதாய கூடத்தையும் தனியாரிடம் குத்தகைக்கு விட்டால் முறையாக பராமரிப்பார் கள். மக்களும் குறைந்த வாடகையில் சமுதாய கூடத்தை பயன் படுத்துவார்கள். கட்டடங்கள் பாழாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior