உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

கடலூர் :

                    கடலூர் அடுத்த பெரிய கங்காணாங்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷீரடி சாய்பாபா கோவில்  கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை கணபதி பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, மகாலட்சுமி ஹோ மம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, புதிய சிலை கள் கண் திறந்தல், பூர்ணா ஹீதி நடந்தது.

                       மாலை 6.35 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார் பணம், ரக்ஷ பந்தனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6.05 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், காலை 8.40 மணிக்கு மகா பூர்ணாஹீதி யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9.15 கோபுர ஸ்தூபி கும்பாபிஷேகம், 10.20 மணிக்கு ஷீரடி சாய்பாபா கும்பாபிஷேகம் நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior