உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: எம்.சி.சம்பத்

கடலூர் :

                  கருணாநிதி அவர் குடும்பத்தினர் வாழ பொய்யான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார் என எம்.சி.சம்பத் பேசினார். கடலூர் நகர அ.தி.மு.க., சார்பில் முன் னாள் முதல்வர் எம்.ஜி. ஆர்., 93வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது. நகர செயலாளர் குமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ரங்கா முன்னிலை வகித்தார்.  மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத், முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுப்ரமணியன், மீனவர் பிரிவு செயலாளர் தங்கமணி, நகர பொரு ளாளர் ரவிச்சந்திரன், முன் னாள் நகர செயலாளர் குமார், கவுன்சிலர் கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் பேசுகையில் "கருணாநிதி இன்னும் ஒரு ஆண்டுதான் ஆட்சியில் இருப்பார். ஆனால் 6 ஆண்டுகளுக்கு திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார். 21 லட்சம் வீடுகள் 6 ஆண்டுகளில் கட்டிக் கொடுக்கப்படும் என கூறுகிறார். அவரது குடும்பத்தினர் வாழ பொய்யான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்' என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior