உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

சூதாட்ட தகராறில் தீ வைத்தவருக்கு வலை

பரங்கிப்பேட்டை :

                      சூதாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றவரை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரத்தை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் காசு வைத்து சூதாடினர். அப்போது குலேந்திரன் என்பவர் சூதாட்டத்தில் பணத்தை தோற்றுவிட்டார். கோதண்டராமன் என்பவர் ஜெயித்துவிட்டதாக தெரிகிறது. சூதாட்டத்தில் தோற்றுவிட்ட பணத்தை குலேந்திரன் கேட்தால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட் டது. ஆத்திரமடைந்த கோதண்டராமன், விளக்கு மண் ணெண்ணையை குலேந்திரன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். படுகாயமடைந்த குலேந்திரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச் சந்திரன் வழக்கு பதிந்து கோதண்டராமனை தேடிவருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior