உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

வெண்கலம் வென்ற போலீசாருக்கு அஷ்வின் கோட்னீஸ் பாராட்டு

கடலூர் :

                சென்னையில் நடந்த காவல்துறையின் தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற போலீசாரை எஸ்.பி., பாராட்டினார். சென்னையில் கடந்த 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை காவல்துறையினருக்கான தடகளப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடந் தது. இந்த போட்டியில் போலீஸ் துறையின் 6 மண்டலங்களைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற் றனர்.  கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட வடக்குமண்டலம் சார்பில் 63 பேர் பங்கேற்றனர். இதில் கடலூரைச் சேர்ந்தவர்கள் 800 மீட்டர் ஓட்டம், 400க்கு 400 போட்டியில் வெண்கலமும், டெக்ரத்லான், உயரம் தாண்டுதல் போட்டிகளில் 3 வது இடத்தையும் பெற்றனர். கடலூர் மாவட்ட போலீசார் மொத்தம் ஏழு பதக் கங்களை பெற்றனர். பதக்கம் பெற்ற போலீசார் கடலூர் எஸ்.பி., அஸ்வின் கோட்னீசை சந்தித்து பாராட்டு பெற்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior