உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி

விருத்தாசலம் :

             விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப்  படை மற்றும் பள்ளி சுற்று சூழல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கான சுற்று சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் வனத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமுதம் போட்டிகளை துவக்கி வைத்தார். பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் மற்றும் பசுமையின் அவசியம் குறித்த அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 200 க்கும் மேற் பட்ட மாணவர்கள் பங் கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior