உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

இரு பிரிவினரிடையே மோதல் : அமைதிக்குழு கூட்டத்தில் தீர்வு

திட்டக்குடி :

                திட்டக்குடி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அமைதிக்குழு கூட்டத் தில் தீர்வு காணப்பட்டது.திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தில் காணும் பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது, இரு பிரிவினரிடையே  மோதல் ஏற்பட் டது. தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று இருதரப்பினரையும் சாமாதானம் செய்து வைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பிரச்னை ஏற்பட்டதால் இரு தரப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

             இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் பதட்டம் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தாலுகா அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது.  தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், துணை தாசில்தார் பாலு, ஆர்.ஐ., ராமச்சந்திரன், வி.ஏ.ஓ., பன்னீர் செல்வம், வி.சி., நிர்வாகிகள் குணத்தொகையன், தமிழன்பன் உட்பட இரு பிரிவிலுள்ள முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் நடந்த சம்பவங்களை மறந்து மீண் டும் ஒற்றுமையுடன்  இருப்பதாக இரு பிரிவினரும் உறுதியளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior