உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் எண்ணெய் பனை சாகுபடி பயிற்சி

 கடலூர் : 

                கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு எண் ணெய் பனை சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி நடந்தது.
 
                       கரும்பு ஆராய்ச்சி நிலைய முனைவர் பாலராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். கடலூர் வட் டார உதவி வேளாண் இயக்குனர்  இளவரசன் வரவேற்றார். துணை இயக்குனர் பாபு எண்ணெய் பனை அபிவிருத்தி திட்டம், பிற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் அமரேசன் மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். உற்பத்தி அலுவலர் சாலமன் செல்வசேகர், முன் னாள் பண்ணை வானொலி அலுவலர் துகிலி சுப்ரமணியம், காவேரி பாமாயில் நிறுவன ஒருங்கிணைப் பாளர் நாகப்பன், மாவட்ட பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் எண்ணெய் பனை சாகுபடி குறித்தும், பாமாயில் ஆலைகளுடன் விவசாயிகள் தொடர்பு கொள்ள ஏற்ற வழிமுறைகள் குறித்தும் விளக்கினர். ஏற்பாடுகளை கடலூர் உதவி வேளாண் அலுவலர்கள் ஜெயராமன், ஜெயமணி. பரமசிவம், தெய்வசிகாமணி, பிரபாகரன், காவிரி பாமாயில் நிறுவன அலுவலர் மனோகர் செய்திருந்தனர். கடலூர் வட்டார விவசாயிகள் 50 பேர் பங்கேற்றனர். கடலூர் வேளாண்  அலுவலர் சின்னக்கண்ணு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior