உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

டாஸ்மாக் ​கடைகளில் சோதனை:​ 10 பேர் கைது

கடலூர்:

                கடலூரில் திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளில் சோதனை நடத்தி,​​ அவற்றின் அருகே அனுமதியின்று உணவுப் பண்டங்களுடன் கூடிய மது அருந்தும் கூடங்களை நடத்திய 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர்.​ ​÷டாஸ்மாக் மதுக் கடைகளை ஒட்டி அனுமதியின்றி மதுஅருந்தும் கூடங்களை நடத்துவதாகவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.​ ​ ​ எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில்,​​ கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் போலீஸôர்,​​ திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளை சோதனையிட்டனர். டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகே அனுமதியின்றி மது அருந்தும் கூடங்களை நடத்தியதாக,​​ மேல்பட்டாம்பாக்கம் பாஸ்கர் ​(58),​ திருவண்ணாமலை ராமு ​(36),​ விஜய் ​(41),​ வளவனூர் சிங்காரவேலு ​(27),​ மதுரை பார்த்தசாரதி ​(37),​ கூத்தப்பாக்கம் நச்சினார்க்கினியன் ​(55),​ திருப்பாப்புலியூர் பழநிவேல் ​(21),​ சரவணன் ​(29),​ சந்தோஷ்குமார் ​(30),​ கே.என்.பேட்டை பழநி ​(47) ஆகியோரைப் போலீஸôர் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior