உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

அண்ணாமலைப் பல்கலை நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11 ஆண்டுக்கான அனுமதி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வரும் கல்வி ஆண்டுக்கான பி.இ., பி.எஸ்சி. விவசாயம், எம்.பி.பி.எஸ். பிடிஎஸ். பி.பி.டி, பி.எஸ்சி நர்சிங், பி.பார்மசி ஆகிய பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் விற்பனையை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்தார். பி.இ., பி.எஸ்சி பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விலை ரூ.400, எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ். பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கான விண்ணப்ப விலை ரூ.300. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31.03.2010. பல்கலைக்கழகத்தின் மேற்கண்ட வகுப்புகளில் வரும் கல்வியாண்டில் சேர்ந்து பயில இந்த நுழைவுத்தேர்வு அவசியம் என்றும், மார்ச் மாதம் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் இத்தேர்வு எழுத வேண்டும் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior