உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

நகரில் குடிப்பிரியர்கள் கேலி : டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை

கடலூர் : 

              கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டில்   குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த பெண்கள்  டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.  கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் உள்ளது.  இந்த மார்க்கெட்டில் அதிகளவில் பெண்கள் மீன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குடிபிரியர் வசதிக்காக 24 மணி நேரம் சரக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிமக்கள் குடித்துவிட்டு மார்க்கெட்டிற்கு மீன் வாங்க வரும் பெண்களை கிண்டல் செய்து வந்துள்ளனர். நேற்று மார்க்கெட் பகுதி யில் குடித்துவிட்டு சிலர் பெண்களை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலையிலேயே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முதுநகர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  போலீசார் டாஸ்மாக் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர்  பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கடலூர் மார்க்கெட் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior