உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

பஸ்சிலிருந்து விழுந்த மாணவன் பலி

நெய்வேலி : 

                 மந்தாரக்குப்பத்தில் பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன்  இறந்தான்.
 
                 முதனையை சேர்ந்த செல்வம் மகன் அகிலன் (13). மந்தாரக்குப்பம் என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு  படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் காத்திருந்தான். அப்போது முதனை வழியாக விருத்தாசலம் செல்லும் டவுன் பஸ்  நிலையத்திற்குள் திருப்பியபோது பஸ்சில் முன்புற படிக்கட்டில் அகிலன் ஏறினான். அப்போது கால் தடுமாறி விழுந்ததில் பஸ் சின் சக்கரம் ஏறி  அதே இடத்தில் இறந்தான். இந்த விபத்து குறித்து மந்தாரக்குப்பம் இன்ஸ் பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior