உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

வரதட்சணை கொடுமை: மூவருக்கு வலை

சேத்தியாத்தோப்பு : 

             மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய அரசு பஸ் டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேத்தியாத்தோப்பை  அடுத்த தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் மகள் விஷ்ணுப்பிரியா (27). நந்தீஸ்வரமங்கலத்தை சேர்ந்தவர் மணிமாறன் (33) அரசு பஸ்சில் டிரைவராக இருக்கிறார். இருவருக்கும் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஷ்ணுப்பிரியா வீட்டிலிருந்து மணிமாறனுக்கு 40 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர். திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின்போது மணிமாறன் விஷ்ணுப்பிரியாவை அடித்து உதைத்து  கொடுமைபடுத்தி உள்ளார். அப்போது மணிமாறனின் தாய் இன்பவள்ளி, தந்தை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இதுபற்றி விஷ்ணுப்பிரியா சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்கு பதிவு செய்து மணிமாறன், ராதாகிருஷ்ணன், இன்பவள்ளி ஆகியோரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior