உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

கேட்பாரற்று கிடந்த ரேஷன் பொருட்கள் வருவாய்த் துறையினர் கைப்பற்றி விசாரணை

திட்டக்குடி : 

             திட்டக்குடி அருகே கேட்பாரற்று கிடந்த ரேஷன் பொருட்களை அதி காரிகள் கைப்பற்றினர்.
 
                  திட்டக்குடி தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் செழியன், உதவியாளர் இளவழகன் கொண்ட வருவாய்த்துறை குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராம பஸ் நிறுத்தத்தில் 50 லிட்டர் மண்ணெண்ணெய் பாரல் ஒன்றும், தலா 50 கிலோ எடை கொண்ட 3 மூட்டை அரிசியும் கேட்பாரற்று கிடந்தது. பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் தீவிரமாக தேடினர். மர்ம நபர்கள் பொருட்களை விட்டு தப்பியோடியதால், அவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior