உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

சென்னை கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:
 
               தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு கல்லூரிகளை ஒருமைவகை பல்கலைக் கழகங்களாக மாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தினர் ஏற்கெனவே 2 கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் கவாஸ்கர் தலைமை தாங்கினார். செயலர் ரியாஸ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலர் உஷா மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர், மனோகரன், கருணாநிதி, நாராயணசாமி, சாந்தி, வணங்காமுடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக மார்ச் 16-ம் தேதி 22 மாவட்ட மையங்களில் உண்ணாவிரதம்,  மார்ச் 24-ம் தேதி 8 மையங்களிóல் பேரணியும், ஏப்ரலில் தேர்வு புறக்கணிப்பு, மறியல், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் அறிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior