உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

உணவு பாதுகாப்பு தொடர்பாக 3 நாள் பயிற்சி கடலூரில் துவங்கியது

கடலூர் : 

        கடலூர் மாவட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட அளவிலான 3 நாள் உணவு பாதுகாப்பு தொடர்பாக பயிற்சி கடலூரில் துவங்கியது.
 
       கடலூர் மாவட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட அளவில் விவசாயிகள், விவசாயம் தொடர்பாக பணிபுரியும் நுகர்வோருக்கு,  உரிமைகள், கடமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான 3 நாள் பயிற்சி நேற்று கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று துவங்கியது.  கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார். உதவி இயக்குனர் இளவரசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் தேவராஜன், பிரமேலதா பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பேசுகையில் "விவசாயத்தை பொறுத்தவரை பசுமை புரட்சி மிகவும் முக்கியமானது.  தற்போது ஏற்பட் டுள்ள விஞ் ஞான வளர்ச்சிக்கு ஏற்ப பூச்சி மருந்துகளை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண் டும். மின் சாரம், தண் ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என பேசினார். தொடர்ந்து இப்பயிற்சி 18ம் தேதி  சிதம்பரம் கோட்டத்திலும், 25ம் தேதி விருத்தாசலம் கோட்டத்திலும் நடத்தப்படுகிறது. சம்பிரதாயத்திற்காக நடந்த பயிற்சி:  பயிற்சியின் தொடக்க விழா அழைப்பிதழ் விரல் விட்டு எண் ணக்கூடிய குறைந்த அளவிற்கு அச்சடித்ததால் பத்திரிகையாளர்களுக்கு கூட வழங்கவில்லை.  நேற்று நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கூட அழைப்பு இல்லாததால் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior