உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

கடலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டி: 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

          அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 30ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

               கடலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 30 வயதினருக்கு 100 மீ., 3,000 மீ.,  40 வயதினருக்கு 100 மீ., 1,500 மீ., ஓட்டம், 50 வயதினருக்கு 50 மீ., ஓட்டம், 3,000 மீ., நடை, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீ., நடை போட்டியும், இவற்றுடன் அனைத்து பிரிவினர்களுக்கும் நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடைபெறும்.பெண்கள் பிரிவில் 30 வயதிற்குட் பட்டவர்களுக்கு 100 மீ., 800 மீ., 40 வயதினருக்கு 100 மீ., ஓட்டம், 3,000 மீ., நடை, 50 வயதினருக்கு 50 மீ., ஓட்டம், 1,500 நடை, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீ., நடை இவற்றுடன் அனைத்து பிரிவினருக் கும் நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும்.

              இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அரசுப் பணியாளர்கள் தங்களது பிறந்த தேதி, வயது மற்றும் பங்கேற்க உள்ள விளையாட்டை குறிப்பிட்டு தாங்கள் பணி புரியும் அலுவலகம் மூலமாக வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு கிடைக்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்குவதுடன் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior