உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

கடலூரில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டம்

கடலூர் : 

           தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் மனித சங்கிலி  போராட்டம் நடத்தினர்.

         தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் குடும்பத்துடன் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கடலூர் பெரியார் சிலையிலிருந்து புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் வரை மனித சங்கிலியில் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். காமராஜ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சரவணன் இயக்கம் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ராஜாமணி, ஜாஸ்மின் மாநிலத் தலைவர் சிங்காரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior