உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

வருங்கால வைப்பு நிதி விவரம் அறிய எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம்


               ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக எஸ்.எம்.எஸ்., வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஊழியர்களின் வைப்பு நிதி நிறுவனம் எஸ்.எம்.எஸ்., மூலம் ஊழியர்கள், உறுப்பினர்கள், பென்ஷன் வாங்குபவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த சேவை மூலம் பென்ஷன் கடன் விண்ணப்பம் மற்றும் செட்டில்மென்ட் குறித்த நிலை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

            நிறுவனங்கள் பணம் செலுத்திய விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையை பெற, உறுப்பினர்கள் தங்களின் மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் தங்கள் மொபைல் எண்கள் மற்றும் தங்கள் ஊழியர்களின் மொபைல் எண்கள் குறித்த விவரங்களை உரிய நபரின் கையெழுத்துடன், மண்டல அலுவலகங்கள் அல்லது துணை மண்டல அலுவலகங்களில் தாக்கல் செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றன. மேலும் விவரங்களை http://www.epfindia.nic.in.., http://www.epfochennai.tn.nic.in.. என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior