உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

கடலூர் மாவட்டத்தில் மாதிரிப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தேர்வு முடிவு வெளியீடு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ள மாதிரிப் பள்ளிகளுக்கு 9-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி அறிவித்தார்

அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான பண்ருட்டி, நல்லூர் ஒன்றியங்களில் 2010-11-ம் கல்வி ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மாதிரிப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள். இதற்காக 18-ம் தேதி கடாம்புலியூர், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 690 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

            மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, தேர்வு மையங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் ஒட்டப்பட்டு உள்ளது. 11-ம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கு காடாம்புலியூர் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அணுகுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior