உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

சிதம்பரம் அருகே சுகாதார சீர்கேட்டுடன் ஊர் பொதுக்குளம்


சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் ஊர் பொதுக்குளம் தூர் வாரப்படாமல் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

            சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளம் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலாளர்கள் அதிகமாக உள்ள இப்பகுதி  மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், கால்நடை கழுவுவதற்கும் பயன்படுத்தும் விதமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ஊர் பொதுக்குளம் உள்ளது.

             இக்குளம் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் தூர்ந்தும், ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியும் சுகாதார சீர்கேட்டுடன் அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசி வருகிறது. இருந்தும் வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் குளத்து நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்த்து பிற உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி குளத்தை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior