உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

அரசு உதவித் தொகை வழங்குவதில் முறைகேடு: இருந்தால் கடும் நடவடிக்கை; கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

கடலூர்:

             அரசால் அனுப்பப்படும் உதவித் தொகை பயனாளிகளுக்கு சென்றடைவதில் தவறுகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

              கடலூர் மாவட்டத்தில் அரசு உதவித் தொகை முறையாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, அஞ்சல் கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், பி.ஆர்.ஓ., முத்தையா பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

            மத்திய, மாநில அரசுகளால் முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற கூலிகள் ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை மாதம் தோறும் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் உதவித் தொகை பயனாளிகளுக்கு கிடைக்கிறதா என்பதை தாசில்தார்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். இது தவிர ஆர்.டி.ஓ., க்கள், தாசில்தார்கள் கிராமங்களில் முகாம் செல்லும்போது அங்குள்ள பயனாளிகளை சந்தித்து திடீர் ஆய்வு செய்ய வேண்டும். அரசால் அனுப்பப்படும் உதவித் தொகைகள் பயனாளிகளுக்கு சென்றடைவதில் தவறுகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior